திருகோணமலையில் 34 வயது நபர் ஒருவர் வெட்டிக் கொலை.!

0
151

தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் அதிகாலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here