இலங்கைக்கு கனடா வழங்கும் மிகப்பெரிய உதவி..!

0
185

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 3 மில்லியன் (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபாய்) டொலர்களை கனடா வழங்குகிறது என்று இலங்கையிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த உதவி வழங்கப்படுகிறது.

அவசரகால உணவு உதவி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு, ஐ.நா மற்றும் IFRC மூலம் அவர்களின் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து இந்த பங்களிப்பு வழங்கப்படும்.

மேலும், இலங்கையின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்தல் உட்பட இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கும் தொடர்ந்து சர்வதேச உதவித் திட்டங்களை கனடா முன்னெடுத்துள்ளது.

இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இலங்கையர்களுடனும் கனடா தொடர்ந்து நிற்கிறது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது என்று உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here