திருகோணமலை பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் சிசு.!

0
139

திருகோணமலை கன்னியா – வள்ளுவர்கோட்டம் பகுதியை அண்மித்து வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த பச்சிளம் சிசுவொன்று இன்று (04) பகல் மீட்கப்பட்டுள்ளது.

அவ்வீதியூடாக சென்ற ஒரு குடும்பத்தினர் சிசுவை கண்டெடுத்து உப்புவௌி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சிசு பிறந்து ஒருநாளே ஆகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், சிசுவை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிசு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here