சுவிஸில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது, மற்றும் 25 வருடங்களாக குடும்பத்துடன் சுவிற்சர்லாந்தில் வசித்து வருகின்றார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கருணாகரன் நர்மலா (47) என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.
பொதுமக்கள் நடமாட்டமுள்ள சிற்றுண்டிக் கூடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுள்ளது.
சுவிற்சர்லாந்தில் ஆர்கெவ், கான்டன் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள சிற்றுண்டிக் கூடத்தில் இந்த கொலை நிகழ்ந்தது.
இது குறித்து உள்ளூர் காவல்துறையின் கூற்றுப்படி,
இது ஒரு உறவு குற்றம் காரணமாக ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றார்.
இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கிடையிலான தகராறே கொலையில் முடிந்துள்ளது எனவும் 47 வயதான மனைவி கொல்லப்பட்டார் எனவும் 57 வயதான கணவர் கைதானார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்றுப் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
தகலறிந்து பொலிசார் அங்கு சென்ற போது, பாதிக்கப்பட்டவர் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்தார்.
அவரை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் கணவன் எதிர்ப்பின்றி பொலிசாரிடம் சரணடைந்தார் என குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.