விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் பிரான்சில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம் வட்டாராம் முள்ளியவளை, முல்லைத்தீவு மாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்ட குணசிங்கம் மோகனராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முன்னாள் போராளி 2009 ஆம் ஆண்டு போரின் பின்னர் பாதுகாப்பு கோரி பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்துள்ள நிலையில் 20.02.23 நேற்று பிரான்சில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.