கனடாவில் ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழ் சகோதரர்கள்..!

0
305

கனடாவின் ஒன்றாரியோவில் வாழ்ந்து வரும் தமிழ் சகோதாரர்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்த இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் வெற்றியீட்டியுள்ளனர்.

யோகராஜ் பொன்னுத்துரை, தவராஜா பொன்னுத்துரை மற்றும் அருள்வதனி உதயகுமார் ஆகிய சகோதர சகோதரிகளே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இணைந்து சுமார் ஒரு வருடமாக லொட்டரி சீட்டுக்களை வாங்கி வருகிறார்கள்.

“நான் எங்கள் டிக்கெட்டுகளை சரிபார்க்க கடைக்குச் சென்றேன், நாங்கள் 5 மில்லியன் டொலர்களை (இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட 126 கோடி ரூபா) வென்றதைக் கண்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தேன்” என்று டொராண்டோ நகரத்தில் உள்ள OLG பரிசு மையத்தில் தங்கள் பணத்தை எடுக்கும்போது தவராஜா கூறினார்.

யோகராஜா பொன்னுதுரை, தவராஜா மற்றும் அருள்வதனி ஆகிய சகோதர சகோதரிகளே இந்த அதிர்ஷ்டசாலிகள்.

பரிசு வென்றதை அவரது சகோதரரி நம்பவில்லை என்றும், மற்றொரு சகோதரர் மயங்கியே கீழே விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த பரிசுத் தொகையை வைத்து கார் வாங்குதல், வீடு கட்டுதல், குழந்தைகளின் படிப்பு என இவை அனைத்திற்கும் செலவு செய்ய உள்ளதாகவும் குறித்த தமிழ் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here