திருகோணமலை பகுதியில் துயரம்; பிரசவத்தின் பின் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்.!

0
501

திருகோணமலை – பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மூதூர் தள வைத்தியசாலையில் விசேட பெண் வைத்திய நிபுணர் குறித்த நாளில் வருகை தராமையால் மிகவும் ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையும் தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பேசு பொருளான யாழ் பல்கலைக்கழக காதல் கதை..குவியும் வாழ்த்துக்கள்.!

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி கடத்தல் விவகாரம்; குடும்ப சண்டையே காரணம்.!

ஒரே வீட்டிலிருந்த 4 சிறுவர்கள் மாயம்; கதறும் பெற்றோர்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here