அவுஸ்திரேலியாவில் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் கடுமையான பற்றாக்குறை காணப்படுகிறது.
இதனைப் பூர்த்திசெய்வதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதற்கான பிரசாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) அறிக்கையின்படி ஆர்வமுள்ள இலங்கையர்கள் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குள் பிரவேசித்து உரிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையத்தளத்தில் சென்று சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கலாம்)