கொழும்பில் லண்டன் அக்காவின் கணவரால் 5 மாத கர்ப்பிணியான வவுனியா யுவதி..!

0
510

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

குறித்த பெண் பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் தனிமையில் இருந்த போது அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அங்கு வசித்துவந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

சிகிச்சைகளின் பின் உயிர் பிழைத்த குறித்த பெண் 5 மாத கர்ப்பம் என வைத்தியர்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்கள்.

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லண்டனிலிருந்து இலங்கை வந்து அவர்களின் வீட்டில் 2 வாரங்கள் தங்கியிருந்த அக்காவின் கணவரே காரணம் என தெரியவந்துள்ளது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தனது மகள் கற்பமடைந்திருப்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட குறித்த யுவதிக்கும் லண்டனில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்து ஒரு மாதத்தில் திருமணம் நடக்கவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதற்கான ஆயத்தங்கள் மற்றும் மண்டப ஒழுங்குகள் என்பவற்றுடன் திருமண அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு வழங்கப்படவிருந்த நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மெற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here