கனடாவில் நேற்றைய தினம் (29) நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற யாழ் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் 5 வருடங்களுக்கு முன்னர் யாழில் இருந்து கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் யாழ் வடமராட்சி – கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன் (வயது-28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மேலும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.