லண்டனில் இருந்து பெற்றோருடன் யாழ் வந்த 6 வயது சிறுவன் மருதங்கேணி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) அன்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
லண்டனில் இருந்து உறவினரின் மரண சடங்கிற்கு வந்திருந்த 6 வயது குருபரன் ஆரிஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.