திருமலையிலும் கோர விபத்து; சம்பவ இடத்திலே உயிரிழந்த இளைஞன்.!

0
407

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் அன்சார் (வயது – 31) எனவும் தெரியவருகிறது.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் விபத்துக்குள்ளான இடத்தில் காணப்படுவதாகவும் விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here