யாழில் யுவதிக்கு அவுஸ்திரேலிய மாப்பிள்ளையுடன் திருமணம்; வீட்டுக்கு வந்த சப்ரைஸ் கிப்ட்டால் நடந்த சம்பவம்.!

0
2636

முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படத்தை அவரது திருமண பொன்னுருக்கு நாளில் சப்ரைஸ் கிப்ட் என அனுப்பிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனால் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையில் அடிதடி இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் உரும்புராயில் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராயில் உள்ள யுவதி ஒருவருக்கும் உரும்புராயை பூர்வீகமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள இளைஞருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயித்திருந்தனர்

இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னுருக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மணமகன் வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் சென்றிருந்தனர் சப்ரைஸ் கிப்ட் வழங்கும் நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் மணமகனது நெருங்கிய நண்பர் ஒருவர் சப்ரைஸ் கிப்ட் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொன்னுருக்கும் நேரத்திற்கு சற்று முன்னதாக மணமகள் தரப்பினரின் முன்பாக பெட்டியை திறக்குமாறும் அந்த நேரத்தில் பரிசை அனுப்பியவர் மணமகனை தொலைபேசியில் தொடர்பு கொள்வார் என்றும் குறிப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.

இதன்பின் பொன்னுருக்கிற்காக மணமகள் வீட்டார் வந்த பின்னர் மணமகன் தரப்பினர் அந்த பெட்டியை திறந்துள்ளனர்

அதற்குள் மணமகளின் அந்தரங்க புகைப்படம் ஒன்றும் பாதி உண்ணப்பட்ட மாம்பழமும் சில கற்களும் பொதி செய்யப்பட்டிருந்தன.

இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகன் தரப்பினர் பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றி மணமகனின் உறவினர்கள் சிலர் மணமகள் தரப்பினரை தாக்க தொடங்கினர்.

அதன்பின் மணமகள் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனமொன்றில் கல்வி கற்றவர் என்றும் அந்த சமயத்தில் சிரேஸ்ட மாணவன் ஒருவருடன் காதல் உறவில் இருந்தார் என்றும் தெரிய வந்தது.

இதன்போது இருவரும் நெருக்கமாக இருந்த சமயத்தில் காதலன் அவரது அந்தரங்க புகைப்படத்தை எடுத்துள்ளார்.

யுவதிக்கு இந்த வருட தொடக்கத்தில் அவுஸ்திரேலிய மணமகனுடன் திருமண பேச்சு இடம்பெற்று நிச்சயமாகியுள்ளது.

இந்த திருமண பேச்சை அடுத்து உள்ளூர் காதலனுடனான தொடர்பை குறித்த யுவதி நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காதலன் யுவதியை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

கடந்த காதலர் தினத்தன்று இருவரது புகைப்படமும் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்று தயாரித்து யுவதியின் வீட்டு வாசலில் ஒட்டியிருந்தார்.

அத்துடன் அந்த சமயத்தில் யுவதி வெளியில் செல்லும் போது மது போதையில் அவரை தொந்தரவு செய்துள்ளார்.

அத்துடன் காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து யுவதியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து இளைஞர் எச்சரிக்கப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் இளைஞன் குறித்த யுவதியை தொந்தரவு செய்யவில்லை

இந்நிலையில் தற்போது யுவதியின் பொன்னுருக்கில் மர்ம நபர்கள் அனுப்பிய சப்ரைஸ் கிப்டினால் அவரது திருமணம் குழம்பியுள்ளது.copied

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here