கனடாவிலிருந்து நண்பியை காண சுவிஸ் சென்ற யாழ் குடும்பஸ்தர் ஒருவரை நண்பியின் கணவர் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கனடாவிலிருந்து சுவிஸ் சூரிச் பகுதிக்கு சுற்றுலா சென்ற யாழ் குடும்பஸ்தர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 43 வயதான குடும்பஸ்தரே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்றது.
தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக சுவிஸ்லாந்திற்கு விடுமுறையில் சென்றதாக தெரியவருகின்றது.
பாடசாலை நண்பியின் வீட்டிலேயே நண்பியின் கணவரால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்லதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் பல தடவைகள் நண்பியின் கணவர் வீட்டில் இல்லாத வேளைகளில் தனது வீட்டிற்கு வந்து சென்றமையை கண்காணிப்பு கமரா மூலம் கணவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்தே மனைவியை தேடிவந்த கனடா நபரை கணவர் தாக்கியதாக கூறப்படுகின்றது.