சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் அதிரடி கைது..! பின்னணியில் ஷாக் காரணம்

0
303
ஊடக செய்திகளை பார்வையிட இங்கு கிளிக் பண்ணவும்

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரை போலீசார் திடீரென கைது செய்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. இவரது கணவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். லிப்ரா புரோடக்சன்ஸ் எனும் பெயரில் படம் தயாரித்து வருகிறார். ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமியை திருமணம் செய்ததில் இருந்து மிகவும் பிரபலமானார்.

மேலும் அடிக்கடி ரவீந்தர் சந்திரசேகர் சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இந்நிலையில் தான் தற்போது ரவீந்தர் சந்திரசேகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக பாலாஜியிடம், ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலீடு செய்தால் பங்குதாரராக சேர்த்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பாலாஜி ரூ.16 கோடியை ரவீந்தர் சந்திரசேகரிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து ரவீந்தர் சந்திரசேகர் அவரை ஏமாற்றியுள்ளார்.

இதனால் பாலாஜி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தான் ரவீந்தர் சந்திரசேகர் தனது மனைவி மகாலட்சுமியுடன் சேர்ந்து முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார். இத்தகைய சூழலில் அடுத்த சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here