காதலனை பார்க்க இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த தமிழ் யுவதிக்கு நடந்தது என்ன..?

0
1642
ஊடக செய்திகளை பார்வையிட இங்கு கிளிக் பண்ணவும்

கொழும்பு, அல்விஸ் பிளேஸில் உள்ள ப்ளூ ஓஷன் வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்த இளம் யுவதியொருவர் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற தமிழ் இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்ற யுவதி ஆவார்.

இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவருடன் அறிமுகமாகி பின்னர் இருவருக்கும் இடையில் காதல் உறவு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் அப் பெண் இணையவழியில் முன்பதிவு செய்து அல்விஸ் மாவத்தையில் உள்ள அடுக்குமாடி தொகுதியில் வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்று கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்து தங்கியிருந்துள்ளார்.

அவர் நாளை (10) மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில் இன்று அதிகாலை இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பெண்ணுடன் தங்கியிருந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here