தமிழ் சினிமாவை உலுக்கும் அளவிற்கு இன்று ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீச் பெற்றுள்ள ஆதி குணசேகரன் என்ற மாரிமுத்து தான்.
இன்று காலை 8.30 மணியளவில் வடபழனியில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார், அப்போது திடீரென மூச்சு விட திணறியுள்ளார்.
உடனே தனது காரை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது.
அவரின் மரண செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அடிக்கடி தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் ஏதோ தவறு நடக்க இருப்பது போல் தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோ வைரலாக இறப்பது குறித்து அவருக்கு முன்பே ஏதோ தெரிந்ததா என ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது…