கனடாவின் பிரம்ரனில், பொலிஸ் உத்தியோகத்தர் என்ற போர்வையில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 33 வயதான அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரம்ரனில் உள்ள பெவ்வேர்ட் ட்ரைவ் அன்ட் மௌண்ரனாஸ் வீதியில் வைத்து 13 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெவ்வேர்ட் ட்ரைவ் அன்ட் மௌண்ரனாஸ் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை அணுகிய சந்தேகநபரான அனுஷன் ஜெயக்குமார், தன்னை அதிகாரியாக அடையாளப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
மேலும் சந்தேகநபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேகநபரால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.