திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிலுறுதீன் அம்ஹர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த சிறுவன் வீட்டில் வைத்து மின்குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
உயிரிழந்த சிறுவன் ஜனாஸா தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.