பிரித்தானியாவில் கடந்த (08-09-2023) அன்று உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரின் சொந்த ஊரான வரணிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தனது 13 வயதில் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் புரிந்து வந்த நிலையில் தீடிரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் அவரின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இளைஞரின் சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படவுள்ளது.
இவரின் தீடிர் உயிரிழப்பு வரணி மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.