சுவிஸில் திருமணமான 3 மாதங்களில் யாழ் யுவதி எடுத்த விபரீத முடிவு..!

0
181

யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மாமனாரின் கொடுமையால் யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின் பெற்றோர் காணொளி ஒன்றில் தெரிவித்தது என்னவென்றால்…

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபரொருவர் தனது 19 வயதான பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சுவிஸ்க்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, சுவிஸுக்கு அழைத்து சென்று 3 மாதங்களே ஆன நிலையில் மாமனாரின் கொடூரமான செயல்களை தாங்க முடியாமல் குறித்த யுவதி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கால் மற்றும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் சுவிஸில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எனக்கும் என்ற பிள்ளைக்கும் ஒரு நியாமான முடிவு கிடைக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் உதவி செய்வீர்கள் என்று நம்புவதாக அவர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

இதேவேளை, குறித்த யுவதியின் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யுவதியின் மாமனார் நீங்கள் சுவிஸுக்கு வந்ததால் உங்களை கொளுத்திவிடுவேன் என மிரட்டியுள்ளதாக தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here