கிளிநொச்சியில் பரபரப்பு; சிறையில் இருந்து வந்த இளைஞன் சடலமாக மீட்ப்பு.!

0
201

கிளிநொச்சி உதய நகர் மேற்கு பகுதியில் இன்றைய தினம் (27) அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு காரணங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என இதுவரை தெரியவரவில்லை.

சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான இளைஞன் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here