திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.