ஏர் இந்தியா விமானத்திற்குள் திடீரென தண்ணீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானத்திற்குள் திடீரென மழை நீர் போல தண்ணீர் கசிந்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்களும் தங்கள் ஆதங்களை கொட்டி வருகின்றர். இது குறித்த விவரங்கள் வருமாறு:-
அமிர்தசர்சில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் பி787 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணிகள் நிரம்பியிருந்தனர். விமானம் புறப்பட்டு சென்று கொண்டு இருந்த போது திடீரென லக்கேஜ் வைக்கும் ஒரு பகுதியில் தண்ணீர் கசிய தொடங்கியது. டவுன் பஸ்சில் போல தண்ணீர் கசிகிறதே என ஒரு நிமிடம் பயணிகள் திகைத்தனர். விமானத்தின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் இப்படி தண்ணீர் கசித்ந்தது.
\இதனால், அந்த இடத்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சில நிமிடங்கள் மட்டும் ஓடும் அந்த வீடியோவில், விமானத்தின் ஒருபக்கத்தில் உள்ள லக்கேஜ் ஹோல்டரில் இருந்து தண்ணீர் கசிகிறது. விமானத்தின் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் கசிந்ததால் மழை போல் தண்ணீர் கொட்டுகிறது.
விமான பணிப்பெண்கள் தண்ணீர் கசியும் பகுதிகளை துணியைக் கொண்டு அடைத்துள்ளனர். தண்ணீர் கசிந்த இருக்கைகளில் இருந்த பயணிகள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். விமானத்திற்குள் தண்ணீர் கசியும் வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், ஏர் இந்தியை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். எங்களுடன் பறங்கள் இது பயணம் அல்ல.. அற்புதமான அனுபவம்” என்று கேலியாக கூறியுள்ளார்.
Air India flight 🇮🇳🤦🏽♂️🤦🏽♂️pic.twitter.com/7dpgcSPI2g
— Farid Khan (@_FaridKhan) November 29, 2023