லண்டனில் யாழ் புலம்பெயர் தமிழருக்கு மனைவியால் நேர்ந்த சம்பவம்.!

0
241

லண்டனிலிருந்து மலேசியாவுக்கு வர்த்தக நிமிர்த்தம் சென்ற யாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் மனைவி வழங்கிய தகவலால் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மலேசியாவில் கைதானதாக கூறப்படுகின்றது.

லண்டனில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் குறித்த நபர் அண்மையில் மனைவியுடன் முரண்பட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந் நிலையில் கடந்த வாரம் தனது வர்த்த நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூர் சென்று அதன் பின்னர் மலேசியா சென்ற நிலையில் அங்கு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கைதானவரின் உறவுகள் தெரிவிக்கின்றார்கள்.

அவரது மனைவியே மலேசியா பொலிசாரிடம் கணவர் தொடர்பில் தவறான தகவலைக் கொடுத்து மாட்டிவிட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனராம்.

லண்டன் வாழ் யாழ் குடும்பஸ்தர் மலேசியாவில் உள்ள புலி உறுப்பினர்களை சந்திக்க வந்திருப்பதாக மலேசியாப் பொலிசாருக்கு சில ஆவணங்களை அனுப்பி மாட்டி விட்டதாக உறவினர்கள் கூறுகின்றார்கள்.

கடந்த வியாழன் கைது செய்யப்பட்ட குறித்த குடும்பஸ்தர் தற்போது மலேசிய பொலிசாரின் விசாரணையில் இருப்பதாகத் தெரியவருகின்றது.

அதேவேளை கணவரை மலேசிய பொலிஸாரிடம் மாட்டிவிட்ட மனைவியும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் மனைவி தனது பாடசாலை நண்பனுடன் லண்டனில் தவறான உறவில் இருந்ததாக அறிந்த பின்னரே மனைவியை விவாகரத்து செய்ய குறித்த குடும்பஸ்தர் முடிவு செய்ததாக தகவல்கள் மேலும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here