நெடுங்கேணியில் பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுவன்.!

0
346

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் 04.12.2023 அன்று யாழ்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

சிறுவன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

பனையாண்டான் நெடுங்கேணியினை சேர்ந்த மூன்றரை அகவையுடைய சிறுவன் கடந்த 21.11.2023 அன்று வீட்டில் உழவு இயந்திரம் வீட்டுக்காணியினை உழவு செய்துகொண்டிருந்த போது உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சென்று சிக்குப்பட்ட நிலையில் விபத்தினை சந்தித்துள்ளார்கள்.

சம்பவத்தில் காயமடைந்த சிவலோகநாதன் விந்துஜன் என்ற சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ் போதன மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 04.12.2023 அன்று உயிரிழந்துள்ளான்.

விவசாய நிலங்களை அதிகளவாக கொண்ட வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு விவசாயியும் வீட்டிற்கு ஒரு உழவு இயந்திரங்களை வைத்திருக்கின்றார்கள் எனவே இவ்வாறான உழவு இயந்திரங்களை வைத்திருப்பவர்கள் சிறு பிள்ளைகளை கொண்ட குடும்பங்கள் அவதானமாக செயற்பட்டு உயிரிழப்புக்கள் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here