3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்கு வருகை.!

0
179

4,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளன.

குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வாஸ்கோடகமா சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும், மெயின் ஷிஃப் 5 என்ற சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும் இன்று காலை கொழும்பில் நங்கூரமிடவுள்ளன.

அத்துடன், எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர் என்ற சொகுசு ரக கப்பல் இன்று மதியம் 1.30க்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here