3 நாட்களுக்கு இலங்கை வந்திருந்த பங்களாதேஷ் வைத்தியர் ஒருவருக்கு கிருலப்பனை, பேஸ்லைன் வீதியில் ஒரு அசம்பாவிதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
அது குறித்த வைத்தியரிடம் இருந்த தங்க சங்கிலி மற்றும் 3 பென்டன்களை 2 பேர் கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
வீதியில் நடந்து சென்ற பங்களாதேஷ் வைத்தியரை மர்மநபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், 10 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.
225,000 ரூபா பெறுமதியான திருடப்பட்ட தங்கப் நகைகள் செட்டியார் தெரு பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டவேளை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிருலப்பனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.