கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!

0
304

கிளிநொச்சி, கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் கோசிகன் (33 வயது) என்பரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்ததில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here