நடிகை கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் செய்யப்பட்ட ஆ.பா.ச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக டீப் ஃபேக் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், டீப் ஃபேக் செய்து வீடியோ வெளியிட்டால் அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் நடிகை ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து நடிகைகள் ஆலியா பாட், கத்ரீனா கைஃப், கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்த வெளிவர தொடங்கின. டீப் ஃபேக் செய்யப்படும் வீடியோக்கள் போலியானது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு துல்லியமான மார்பிங் செய்யப்படுவதால் இது மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் செய்யப்பட்ட புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.