வவுனியா, பாவற்குளத்தில் உயிருக்கு போராடிய யுவதி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்தார்
நேற்று (21) மாலை இந்த சம்பவம் நடந்தது.
பாவற்குளத்தில் யுவதியொருவர் தத்தளிப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்திருந்தார்.
நாக இலுப்பைக்குளத்தை சேர்ந்த 17 வயதான ஜான்சிகா என்ற பெண்ணே உயிரிழந்திருந்தார்.
இந்த யுவதி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர். நேற்று மாலை ஆடைத்தொழிற்சாலை பேருந்தில் வீடு திரும்பும்போது, பாவற்குளத்தில் இறங்கியுள்ளார்.
அவர் தவறுதலாக பாவற்குளத்தில் விழுந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.