நோர்வேயில் கடமைக்கு சென்ற 30 வயதான பல்வைத்தியர் கடந்த திங்கட்கிழமை அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு அருகில் காரில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பல் வைத்தியருக்கும் முன்னால் காதலனுக்கும் பொலிஸ் நிலையத்தில் வழக்கு இடம் பெற்று வந்துள்ளது.
குறித்த பல் வைத்தியரிடமிருந்து காதலனை விலகியிருக்குமாறு பொலிஸார் கட்டளையிட்டுள்ளனர். இதனை மீறி காதலன் பல் வைத்தியரான குறித்த பெண்ணை சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.
32 வயதான குறித்த முன்னாள் காதலன் படுகாயமடைந்த நிலையில் குறித்த காருக்குள் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வரதராஜன் ராகவி வயது – 30 என்ற பெண் பல்வைத்தியர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.