எனக்கு முக்கியம் இதுதான்.. இரண்டாவது திருமணத்திற்கு மீனா கொடுத்த பதில்.!

0
154

நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.

நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார். இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.

தற்போது தனது வேலையில் அடுத்தடுத்து கவனம் செலுத்திவரும் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த பேச்சு அதிகமாக எழும்பி வந்தது. சமீபத்தில் மீனாவின் தோழி கலா மாஸ்டர் மீனாவிடம் இரண்டாவது திருமணம் குறித்து பேசியதற்கு அவரை கடுமையாக சத்தம் போட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து மீனா தற்போது கூறுகையில், தனது மகள் தான் முக்கியம்… பெண்களால் தனியாக வாழ முடியும் என்றும் தனது எதிர்காலத்தை கணிக்கும் மனநிலையில் நான் இல்லை… தனது வாழ்க்கையை திட்டமிட்டு வாழ்வது எனக்கு சரியாக இருக்காது.

தனக்கு ஒரு மகள் உள்ள சூழலில் தன்னுடைய மறுமணம் அவரையும் சார்ந்தது என்றும் மீனா தெளிவுப்படுத்தியுள்ளார்.

தன்னுடைய மகள்தான் தன்னுடைய முழு கவனம் என்று கூறியுள்ள மீனா, தற்போதைக்கு இரண்டாவது திருமணம் குறித்து எந்த யோசனையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here