திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி களப்புக் கடலில் நேற்று காணாமல் போன நபர் இன்று (13) சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் புன்னையடி களப்புக் கடலை கடந்து செல்வதற்கு நீந்திச் செல்ல முற்பட்டபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் இன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படையினரும் கிராம மக்களும் இணைந்து படகில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போதே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உடம்புக்குகேணி – ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த கணேசன் அமிர்தலிங்கம் (வயது 65) என பொலிஸார் தெரிவித்தனர்.