நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக மீட்ப்பு.!

0
216

நாசிவன்தீவு பகுதியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயதுடைய அதீக் எனும் இளைஞன் இன்று (13) சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். நேற்று சுழியோடிகள் கடும் தேடுதல் மேற்கொண்ட போதும் இளைஞன் மீட்கப்படவில்லை.

இன்றைய தினம் இளைஞன் சுழியோடிகளின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உறவுகள் தொண்டை கிழிய கத்தினாலும், பெற்றோர்கள், குடும்பத்தவர்கள் புத்தி சொன்னாலும் எதையும் கேட்காமல் நண்பர்களோடு fun எடுக்க போகும் இன்றைய இளைஞர் சமூகத்தின் நிலை கவலையளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here