வவுனியாவை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்.!

0
164

நாட்டிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் இன்றையதினம் (07) ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ளதாக மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

வவுனியா நெடுங்குழி பகுதியை சேர்ந்த நந்தகுமார் அவரது மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் செவ்வாய்க்கிழமை (06) மன்னாரில் இருந்து ரூ.1.50இலட்சம் கொடுத்து படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையில் சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்த இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here