மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழப்பு – இதோ நெஞ்சை உ.றை.ய வைத்த வீடியோ.!

0
120

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார்.

அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் இந்தோனேசிய கால்பந்து வீரர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

கிழக்கு ஜாவாவின் போஜோனெகோரோவில் ஒரு இளம் கால்பந்து வீரர் 2023 இல் சோராடின் U-13 கோப்பையின் போது மின்னல் தாக்கி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட வீரர், மைதானத்தை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக போஜோனெகோரோவில் உள்ள இப்னு சினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கீழ் வீடியோ இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here