மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி மாமனும் மருமகனும் உயிரிழப்பு.!

0
208

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி மாமன் மருமகனாகிய இரு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பிமலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆறுமுகம் லோகநாதன் மற்றும் பலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய விநாயகமூர்த்தி சுதர்சன் ஆகிய இருவரும் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை ஈச்சையடி பகுதியில் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து செய்துவரும் நிலையில், காட்டு விலங்குகள் உள்நுழைவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று பண்ணையை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பண்ணை பகுதிக்கு அருகில் நேற்று வேளாண்மை அறுவடைக்கு மாமனாரும் மருமகனும் சென்ற நிலையில் மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இன்றைய தினம் காலை பண்ணைக்கு சென்ற உரிமையாளர் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here