முல்லைத்தீவு மாங்குளம் – ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
‘எங்கள் கிராமத்தில் கசிப்பு விற்பதை நிறுத்துமாறு’ கூறிய குறித்த இளைஞன், கசிப்பு விற்பனை செய்யும் இளைஞன் ஒருவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது, இதில் 27 வயதுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இவரது சடலம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 21 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
மேலதிக விசாரணையை மாங்குளம் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர், இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.