குழந்தைகளுடன் ரயில் முன் பா.ய்.ந்.த இளம்பெண்.. நொடிப்பொழுதில் நடந்த துயரம்.!

0
270

ராணிப்பேட்டை மாவட்டம், வேலம் கிராமத்திலுள்ள ஒத்தவாடைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். ராணுவத்தில் பணிபுரிந்து வந்த அறிவழகனுக்கு விஜயலட்சுமி என்ற முதல் மனைவி இருக்கிறார். கருத்து – வேறுபாடு காரணமாக விஜயலட்சுமியைப் பிரிந்த அறிவழகன், வெண்ணிலா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்தத் தம்பதிக்கு 6 வயதில் ஜெனுஸ்ரீ, 4 வயதில் தாருனிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில், முதல் மனைவியை சட்டப்பூர்வமாக விவாகரத்துச்செய்ய நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் அறிவழகன். அந்த மனு மீதான விசாரணையின்போது, அறிவழகனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக முதல் மனைவி விஜயலட்சுமி கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சேர்ந்து வாழ்வதற்காக அறிவழகன் வீட்டிற்கே சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் கணவன் அறிவழகனின் விபரீத பேச்சால், இரண்டாவது மனைவி வெண்ணிலா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறிய வெண்ணிலா, வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.

அந்த நேரத்தில், சென்னை நோக்கிச்சென்ற அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு குழந்தைகளுடன் பாய்ந்திருக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்றுபேரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பலியானார்கள்.

தகவலறிந்ததும், காட்பாடி ரெயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உடல்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here