யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது-31) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த நபர் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகின்றது.
இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.