வடக்கில் முற்றாக நிறுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவைகள்.. பயணிகள் பெரும் சிரமம்.!

0
239

வட மாகாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அத்தோடு யாழ் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதே நிலைமை வடக்கில் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.

நேற்றையதினம் உள்ளூர் தனியார் பேரூந்து சேவையை முன்னெடுத்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம் (27) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இன்று இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here