ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை நடத்துவது என்ற போர்வையில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்த இரண்டு ஸ்பா நிலையங்களை சுற்றிவளைத்து இரண்டு முகாமையாளர்களுடன் எட்டு பெண்களை கைது செய்ததாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் நாவலப்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் மஹரகம வட்டேகெதர மற்றும் பன்னிபிட்டிய தெபானம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஸ்பா மையங்களில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நுகேகொட நீதிமன்றில் தேடுதல் உத்தரவு பெற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு 8000 ரூபா என்ற கணக்கில் விற்பனை செய்வதாககூறப்படுகிறது.