கனேடிய அரசாங்கம் மற்றும் ஒன்டாரியோ மாகாணம் ஆகியன இணைந்து கில்மிஷாவுக்கு உயரிய விருது ஒன்றை வழங்கியுள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆக வந்த பெருமைக்கே இந்த விருது வழங்கப்படுள்ளது, இது குறித்து கில்மிஷா தனது முகநூலில் பதிவிட்டிருந்தார், அதில் அவர் குறிப்பிடுந்தாவது…
கனேடிய அரசாங்கம் மற்றும் ஒன்டாரியோ மாகாணம் ஆகியன இணைந்து குறித்த விருதை எனக்கு வழங்கி இருந்தனர், இந்த மறக்க முடியாத இசைப் பயணத்தில் என்னை நம்பி என்னுடன் இணைந்த உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாதனை எனது இசை வாழ்க்கையில் இருந்த அனைவர்க்கும் நன்றிகள் மற்றும் அத்தகைய மரியாதையை எனக்கு வழங்கியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தார். படங்கள் கீழே இணைக்கப்படுள்ளது.