கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பாடசாலையில் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.