மாணவி ஒருவரை பா.லியல் து.ஷ்.பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியை சேர்ந்த ஒருவருக்கே இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் நீதிபதி விராஜ் வீரசூரிய தண்டனையை வழங்கினார். கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் பகுதிநேர ஆசிரியராக கடமையாற்றிய குறித்த நபர் தரம் ஐந்தில் கல்வி கற்ற பாடசாலை மாணவியை து.ஷ்.பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 வருடங்களாக விசாரிக்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த பகுதி நேர ஆசிரியர் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் இவருக்கு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் இத் தொகை வழங்காவிட்டால் மேலும் 2 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.
மேலும் நீதிமன்ற தண்டப் பணமாக ஐந்தாயிரம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி இதனை செலுத்தாவிட்டால் இரண்டு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.