பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர் உயிரிழப்பு..!

0
182

புத்தளம் – சிலாபம் பிரதேசத்தில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சிலாபம் – ரத்ண பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவராவார்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேக நபர்கள் இருவரிடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் அவர்களை துரத்திச்சென்றுள்ள நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் இரு தடவை கீழே தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here