சற்று முன்னர் வெடுக்குநாறி மலையில் நடப்பது என்ன.. வீடியோ

0
142

வெடுக்குநாறி மலைஆலய நிர்வாக தலைவர் உட்பட இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலையில் இன்றையதினம் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற பக்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இன்று காலையில் இருந்து பொலிசார் மற்றும் இரணுவத்தினர் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தியவண்ணம் இருந்தனர்.

மாலை வேளையில் பதற்றநிலை சற்று அதிகரித்து காணப்பட்ட்து. அத்துடன் வெடுக்குநாறி மலையில் இரவு 6 மணிக்கு மேல் யாரையும் தரித்து நிற்க வேண்டாம் எனவும் அவ்வாறு தரித்தால் கைது செய்ய நேரிடும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் வெடுக்குநாறி மலை ஆலயத்தில் இரவு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன், மற்றும் ஆலய நிர்வாக தலைவர் தமிழ்ச்செலவன் ஆகியோர் சற்று முன்னர் சிறீலங்கா பொலீசாரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here