திருக்கேதீஸ்வரம் சென்ற பல லட்சம் பெறுமதியான பைக் தீ பிடித்து எரிந்து நாசம்.!

0
249

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி இன்று மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.

தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரையானது.

தீ பிடித்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை, மன்னார், வவுனியாவில் நேற்றும் இன்றும் கடும் வெப்பநிலை நிலவி வருகிறது, எனவே பைக்கில் செல்வோர் டாங்க் முழுவதுமாக பெற்றோல் நிரப்பி பயணம் செய்வதை குறைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here