வவுனியாவில் இருந்து திருக்கேதீஸ்வரம் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்.. கதறும் பெற்றோர்.!

0
405

நேற்று இரவு உயிலங்குளம் திருக்கேதீஸ்வரம்- பாலாவி ஏரியில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயது கௌசிகன் ரித்திஸ் என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிலங்குளம் திருக்கேதீஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற சிவராத்திரி திருவிழாவைக் காண மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, சிறுவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here